உடையார்பாளையம் அருகே - இரு தரப்பினரிடையே மோதல்: 7 பேர் கைது :

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் முனியத்திரையாபட்டி தெருவில், ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த, மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசனின் மாவீரன் மஞ்சள் படையைச் சேர்ந்த பாவேந்தன்(20), அவ்வழியாக கடைவீதிக்குச் சென்றுள்ளார். அவர் செல்ல வழியில்லாததால், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினரிடம் முறையிட்டுள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த பாவேந்தன், திமுகவினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில், மாவீரன் மஞ்சள் படையைச் சேர்ந்த மகாலிங்கம் உட்பட இருதரப்பையும் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக, இருதரப்பி னரும் அளித்த புகாரின்பேரில், உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாவீரன் மஞ்சள் படையைச் சேர்ந்த பாவேந்தன்(20), ஹரிஷ்(19), ஹரிதாஸ் (20), கலைச்செல்வன் (19), திமுகவைச் சேர்ந்த ராஜபாரதி(26), கார்த்திக்ராஜா (24), வினேஷ்(19) ஆகிய 7 பேரை நேற்று கைது செய்த னர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்