செங்கல்பட்டு, பெரும்புதூரில் அமமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் :

பெரும்புதூர் தொகுதி அமமுக வேட்பாளராகப் போட்டியிடுபவர் முன்னாள் எம்எம்ஏ மொளச்சூர் இரா.பெருமாள். இவர் நேற்று பிள்ளைப்பாக்கம், வெங்காடு, குண்டு பெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சி பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொது மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்கக் கேட்டுக்கொண்டார்.

இதே போல் செங்கல்பட்டு அமமுக வேட்பாளர் சதீஷ்குமார் தொகுதிக்கு உட்பட்ட வடகால் கிராமத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பேருந்து வசதி, சாலை வசதி ஆகிய அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் பிரதான பிரச்சினையான வடகால் கிராமத்தை தனி ஊராட்சியாக அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். இவர் அமமுக செங்கல்பட்டு நகர செயலாளர் கே.சந்தோஷ் குமார் தலைமையில் செங்கல்பட்டு மார்க்கெட் மற்றும் வார்டுகள் வாரியாக வாக்கு சேகரித்த சேகரித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்