குரங்கணி அருகே அணை கட்டப்படும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உறுதி :

போடி தொகுதிக்குட்பட்ட ஆதிபட்டியில் அவர் நேற்று பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றப் பாடுபடுவேன். குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள திட்டங்களை நிறைவேற்றுவேன். கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காலத்தில் தண்ணீர் வீணாவதை தடுத்து, நீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் குரங்கணி அருகே அணை கட்டப்படும் என்றார். தேர்தல் பொறுப்பாளர் வ.வேலுச்சாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.லட்சுமணன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையப்பட்டி, கோடாங்கிபட்டி, போடேந்திரபுரம், சடையால்பட்டி, மாணிக்காபுரம், காமராஜபுரம் ஆகிய இடங்களில் தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்