‘சட்டப்பேரவை தேர்தல் பணிக்கு ஓய்வுபெற்றவர்களுக்கு அழைப்பு’ :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற காவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப் பேட்டை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. எனவே, தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவல் துறையினர் தேவைப்படுகின்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நல அமைப்புடன் நடத்தப்பட்ட கலந்தாய்வில் ஒவ்வொரு முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை காவல் துறையினர் மூலம் உரிய நபர்களுக்கு சேர்க்க உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்