ஆத்தூர் தொகுதியில் எட்டாவது முறையாக போட்டியிட - திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி வேட்புமனு தாக்கல் :

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் எட்டாவது முறையாக போட்டியிட திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆத்தூர் தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஐ.பெரியசாமி போட்டியிட்டு வருகிறார். இதுவரை ஏழு முறை போட்டியிட்டு இரண்டு முறை தோல்வியும், ஐந்து முறை வெற்றியும் பெற்றுள்ளார். எட்டாவது முறையாக போட்டியிட ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜசேகரிடம் நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரசூல்மைதீன், முன்னாள் ஊராட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்தவரை திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து மாலையில் அவர் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்