கரூர் மாவட்டத்தில் - பொதுக்கூட்டங்கள் நடத்த மேலும் 5 இடங்களுக்கு அனுமதி : ஆட்சியர் சு.மலர்விழி தகவல்

கரூர் மாவட்டத்தில் பொதுக்கூட் டங்கள் நடத்த கூடுதலாக 5 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளதாக மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான சு.மலர் விழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட் டத்தில் உள்ள 4 தொகுதிகளில் அரசியல் கட்சிப் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்காக 64 இடங்களின் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சோமூர், வேடிச்சிபாளையம், ஆத்தூர் சந்திப்பு, குளத்துபாளை யம், வெங்கமேடு-திட்டசாலை ஆகிய 5 இடங்கள் அரசியல் கட்சிப் பொதுக்கூட்டம் நடத்த கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்