திண்டுக்கல் தொகுதியின் அதிமுக வேட்பாளர் - அமைச்சர் சீனிவாசன் வேட்புமனு தாக்கல் :

திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

திண்டுக்கல் தொகுதியில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் 2-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் நேற்று பிற்பகல் வேட்புமனுவை கோட்டாட்சியரும் திண்டுக்கல் தொகுதி தேர்தல் அலுவலருமான காசிசெல்வியிடம் தாக்கல்செய்தார். முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பிரேம்குமார் ஆகிய இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பிறகு திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறுகையில், "கடந்தமுறை வாங்கி யதைவிட 4 மடங்கு வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் பணிகள் செய்துள்ளேன். அரசு கொண்டுவந்த நல்ல திட்டங்களும் வெற் றியை உறுதிசெய்யும்" என்றார்.

ஆத்தூர்

ஆத்தூர் தொகுதியில் போட்டியிட ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ராஜசேகரனிடம் சுயேச்சைவேட்பாளர் சங்கர் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழநி, நிலக்கோட்டை, நத்தம் தொகுதிகளில் முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்