மார்ச் 13, 14-ல் : வாக்காளர் அட்டை பதிவிறக்க முகாம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம், வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடக்கிறது என மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-ன்போது புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது மொபைல் போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவரும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான சிறப்பு முகாம் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 1,345 வாக்குச்சாவடி அமைவிடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமைப் பயன்படுத்தி வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை தங்களது மொபைல் போன் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE