கொடைரோடு அருகே விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு : கார்கள் அடுத்தடுத்து மோதல்

திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் வேன் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதியில் சாலையைச் சீரமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. இதனால் சிறிது தூரத்துக்கு ஒரு வழிப்பாதையில் எதிர் எதிரே வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்நிலையில், நேற்று மதுரை நோக்கிச் சென்ற வேன் எதிரே சாலை விரிவாக்கப் பணிக்காக ஜல்லிக்கற்கள் ஏற்றிவந்த லாரி மீது மோதியது. இதையறியாது வேனைப் பின்தொடர்ந்து வந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக வேன் மீது மோதின.

இந்த விபத்தில் வடமது ரையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் கிருஷ்ணகுமார் (36) உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்தனர்.

வேனின் பின்புறம் மோதிய இரு கார்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்தவர்களுக்கும் சிறு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்