தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் :

காஞ்சிபுரம் கீழ்அம்பி பகுதியில் தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் ரமணி தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் வந்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தாம்பரத்தில் இருந்து சோமங்கலம் செல்லும் சாலையில் கிஷ்கிந்தா தீம் பார்க் அருகே தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர். அதில் வந்தவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.81 ஆயிரம் பணத்தை எடுத்து வந்ததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்