திருவள்ளூர் மாவட்டத்தில் பேனர்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பேனர்கள், கொடிக் கம்பங்களை அகற்றும் பணி 2-வது நாளாக நேற்று நடந்தது.

இதில், திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பொன்னையா மேற்பார்வையில் சாலையோரம், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பேனர்கள், கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் சந்தானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE