தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருவிடைமருதூர் (தனி) தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர்- 9445000286, கும்பகோணம் தொகுதிக்கு கோட்டாட்சியர்- 9445000466, பாபநாசம் தொகுதிக்கு மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்- 9786759657, திரு வையாறு தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்- 9442149101 ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதிக்கு கோட்டாட்சியர்- 9445000465, ஒரத்தநாடு தொகுதிக்கு கலால் உதவி ஆணையர்- 9445074594, பட்டுக்கோட்டை தொகுதிக்கு உதவி ஆட்சியர்- 9445000467, பேராவூரணி தொகுதிக்கு முத்திரை கட்டண தனித் துணை ஆட்சியர்- 9600175148 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தேர்தல் விதிமீறல் கள் குறித்த புகார்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்