தருமபுரியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில், தருமபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட இலக்கிய அணிச் செயலர் தகடூர் விஜயன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், தருமபுரி ஒன்றியக்குழுத் தலைவர் நீலாபுரம் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல, பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நகரச் செயலர் சங்கர் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அரங்கநாதன் ஆகியோர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும், காரிமங்கலம், நல்லம்பள்ளி, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை உட்பட மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் கட்சிக் கொடியேற்றி, ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE