‘விவசாயிகளுக்கு இதுவரை ரூ.164 கோடி நிவாரணம்’

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக இதுவரை ரூ.164 கோடி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் காலம் தவறி பெய்த கனமழையால், 1,06,997.26 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து, மக்காச்சோளம், எள், நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இதில், 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர் சாகுபடி பரப்பை வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்து, கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர். அதன்படி, மாவட்டத்தில் 1,23,421 விவசாயிகளுக்கு ரூ.202.35 கோடி நிவாரணத் தொகை வழங்கக் கோரி சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இதுவரை 99,830 விவசாயிகளின் 83,905.14 ஹெக்டேர் சாகுபடி பரப்புக்கு ரூ.164 கோடி இடுபொருள் நிவாரணத் தொகை, அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. எனவே, மீதி யுள்ள விவசாயிகளுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் விரை வில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்