இடைக்கால பட்ஜெட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சந்தைப்பேட்டை நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மன்றத்தின் மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பெ.அழகப்பன், மாவட்டப் பொருளாளர் சு.அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ‘மன்றம்’ நா.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில், திருச்சியில் பிப்.20-ம் தேதி (நாளை) நடைபெறும் மாநிலம் தழுவிய தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் மன்ற உறுப்பினர் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வேண்டும்.

2020-21-ம் ஆண்டுக்குரிய ஆசிரியர் மன்ற உறுப்பினர் பட்டியலை மார்ச் 15-க்குள் ஒப்படைக்க வேண்டும். சட்டப்பேரவையில் பிப்.23-ம் தேதி தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE