செங்கல்பட்டு பகுதியில் கார் திருடிய 3 பேர் கைது: 5 கார்கள் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து மறைமலை நகர் காவல் ஆய்வாளர் ஆர்.நந்தகோபால் தலைமையில் போலீஸார் நேற்று மல்ரோசாபுரம் சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் காரில் வந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் திருச்சி, புத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54), திருச்சியைச் சேர்ந்த அருள்முருகன் (47), சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த பிரபுராஜ் (46) என்பதும், இவர்கள் கார் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டதும் தெரியவந்தது. விசாரணையில் மூவரும் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ரூ.69 லட்சம் மதிப்புள்ள 5 விலை உயர்ந்த கார்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்