புதிதாக 26 பேருக்கு கரோனா

ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக நேற்று 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,773- ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,628-ஆகவும் அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,591-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 19,390-ஆகஉயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர் களில் 19,062 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்