பூலாம்வலசு சேவற்கட்டு ஒருநாள் ஒத்திவைப்பு

அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம்வலசில் இன்று(ஜன.13) தொடங்கி 3 நாட்களுக்கு சேவற்கட்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேவற்கட்டு நடைபெறும் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே, இன்று தொடங்கவிருந்த சேவற்கட்டு ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு நாளை (ஜன.14) தொடங்கி ஜன.16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE