ஊத்துக்குளி அருகே டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

ஊத்துக்குளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வாமலை கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பி.பழனிசாமி (50). அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36), கருப்பசாமி (46), அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போஜன் (22), விக்ரம் (35). இவர்கள், ஊத்துக்குளி காவல் எல்லைக்கு உட்பட்ட விருமாண்டம்பாளையம் பெரியகருக்குபாளையத்திலுள்ள தனியார் நிறுவன கட்டிடம் ஒன்றில் பராமரிப்பு பணிசெய்வதற்காக, டிராக்டரில் சிமென்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமானப் பணிக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். டிராக்டரை வேல்முருகன் (50) என்பவர் ஓட்டியுள்ளார்.

பெரியகருக்குபாளையத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அருகே வளைவில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே பழனிசாமி உயிரிழந்தார். அசாம் தொழிலாளர்கள் உட்பட 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் ஊத்துக்குளி போலீஸார் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் - பெருமாநல்லூர் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிசாமியின் சடலம், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸார் விசாரிக்கின்றனர்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்