முதல்வர் வேட்பாளர் தேர்வில் குழப்பம் எதுவும் இல்லை தமிழக பாஜக துணைத் தலைவர் கருத்து

பாஜக, அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த குழப்பமும் இல்லை என்று, தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், வளையங்காடு பகுதியில் மத்திய அரசின் சாதனைவிளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய பாஜக அரசின் 6 ஆண்டுகால ஆட்சியில் என்னவெல்லாம் சாதனைகள் செய்யப்பட்டுள்ளதோ, அதை மக்களிடம் எடுத்துசொல்வதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த 6 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் பயனடைந்துள்ளனர். அதை மக்களிடம் சொல்வது எங்களது கடமை. இதுபோன்ற கூட்டங்கள், தெருமுனை சந்திப்புகள் மூலமாக பேசும்போது, மத்திய அரசு செய்துள்ள நன்மைகள் மக்களுக்கு புரிகிறது.

பாஜக, அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த குழப்பத்துக்கு எந்த இடமும் இல்லை. ஏற்கெனவே, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி,மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் தெளிவாக கூறிவிட்டனர். இதுகுறித்து முறைப்படி அறிவிப்பு வரும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்