வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஓவியப் போட்டி மருத்துவப் பணியாளர்களுக்கு அழைப்பு

திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்டஅறிக்கையில், "தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி, கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் பணிபுரிந்துவரும் மருத்துவத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களை முன்னிறுத்தி, 100 %வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வுஓவியப்போட்டி மாநில அளவில் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக திருப்பூர் மாவட்டஅளவில் நடத்தப்படும்போட்டியில் மருத்துவம், பாரா மெடிக்கல் சார்ந்த அனைத்து பேராசிரியர்கள்,பணியாளர்கள், மாணவர்கள் மற்றும்முன்களப் பணியாளர்கள் பங்கேற்கதகுதியானவர்கள். ஓவியம் வரைந்து,கல்லூரி நிர்வாகத்தின் மூலமாக மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வரும் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். " என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்