ஊர்க்காவல் படை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா பார்த்திபன் தலைமை வகித்தார். ஊர்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமார் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பாலக்கரை ரவுண்டானா வரை 1.5 கிமீ தொலைவுக்கு 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆர்.டி.மலை அரசுப்பள்ளியில்...

கரூர் மாவட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு நாளில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுவது வழக்கம். 2021 ஆங்கில புத்தாண்டையொட்டி, கரூர் மாவட்டம் ராச்சாண்டார்திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பள்ளியின் வணிகவியல் ஆசிரியரும், சங்க நிர்வாகியுமான கார்த்திகேயன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மூ.மகேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE