கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

By செய்திப்பிரிவு

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராசு முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தலைமை வகித்து, பின்னர்செய்தியாளர்களிடம் கூறும் போது, "டெல்லியில் நடை பெறும்விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகையிட, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளை கைதுசெய்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், பொருளாளர் டி.தங்கராஜ் ஆகியோரை வீட்டு காவலில் வைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை தீவிரவாதிகள்போல காவல் துறை கண்காணிப்பது அச்சுறுத்தும் செயல்.

அடிக்கடி தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர், விவசாயிகளை அச்சுறுத்தும் செயல்களை கைவிட வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்