மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்

By செய்திப்பிரிவு

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் 9 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்களை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் த.ரத்னா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE