பல்லடம் அருகே இளைஞர் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் சாலையில், தெற்குபாளையம் பிரிவு அருகே நேற்று காலை சாலையோரம் இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்துகிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு பல்லடம் போலீஸார் சென்று ஆய்வு செய்ததில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் உயிரிழந்து கிடந்தார்.கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலமாக தடயங்களை சேகரித்த பிறகு, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "கொலை செய்யப் பட்டவரின் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி பார்த்தபோது, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த முருகன் (32) என்பது தெரியவந்துள்ளது. மது பாட்டிலை உடைத்து, அதன்மூலமாக அவரது கழுத்து அறுக்கப்பட்டுள் ளது. கடந்த 27-ம் தேதி மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்ததா அல்லதுவேறு காரணங்கள் உள்ளதா, முருகன் இங்கு ஏதேனும் தங்கிவேலை செய்து வந்தாரா, அவரை இங்கு வரவழைத்து கொலை செய்தனரா என்பது குறித்து வழக்கு பதிந்து தனிப் படைகள் அமைத்து போலீஸார் விசாரிக்கின்றனர்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்