கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை முதல்வர் உடனடியாக கூட்ட வேண்டும் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் `மனதின் குரல்' ஒளிபரப்பு நிகழ்ச்சி காங்கயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாடு முழுவதும் உள்ள நல்ல விஷயங்களையும், மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்வோர் குறித்தும் பிரதமர் மோடி பகிர்ந்து கொள்கிறார். இதனால், அந்த தகவல்கள் உலகம் முழுவதும் சென்றடைகின்றன. இதனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு சமூக முக்கியத்துவம் கிடைக்கிறது.

சமீப நாட்களில் பாஜக, அதிமுக நிர்வாகிகள் மத்தியில், முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை நிலவுகிறது. இதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக கூட்ட வேண்டும். அதன்மூலமாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் யாருக்கு, எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கூட்டணி தலைமை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்