பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்ட திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கக் கிளை ஆகியவை சார்பில் திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேற்கண்ட சங்கங்களைச் சேர்ந்த பா.சவுந்தர பாண்டியன், விஸ்வநாதன், கல்யாணராமன், குமாரவேல், முத்துக்குமார் உட்பட பலர் பேசினர். டெல்லி போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகள் மற்றும் கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்