மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரியதொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கச் செயலாளர் ஏ.சரவணன் தலைமை வகித்தார். தொமுச கவுன்சில் துணைத் தலைவர் ரங்கசாமி கண்டன உரையாற்றினார். நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின் விபத்துகள் நடைபெறாமல் இருக்க தொடர் பாதுகாப்பு வகுப்புகள் நடத்தவேண்டும்.

மின்வாரியத்தில் வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தக்கூடாது, கேங்மேன் பதவியை ரத்து செய்துமின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்