பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு

பெரியாரின் 47-வது நினைவு நாளையொட்டி, திருப்பூர் ரயில் நிலையம் முன் உள்ள தந்தை பெரியார், அண்ணா சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைப்பின் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டசெயலாளர் ச.நந்தகோபால், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சண்.முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அவிநாசி - சேவூர் சாலை வட்டாட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பெரியார் உருவப்படத்துக்கும், தெக்கலூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்திலுள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ளே பெரியார் சிலைக்கு துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரம் பெரியார் சிலைக்கு, திராவிடர் கழகத்தின் தாராபுரம் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்