கஞ்சா விற்ற 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கே.வேப்பங் குளத்தைச் சேர்ந்த முத்து அரியப்பன் மனைவி வில்லம்மாள் (45), உருவாட்டி மனைவி பாண்டியம்மாள் (58). இருவரும் கே.வேப்பங்குளம், கமுதி பகுதிகளில் கஞ்சா, மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பரிந்துரைத்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் 2 பெண்களையும் குண்டர் சட்டத்தில் கமுதி போலீஸார் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்