கோயில்களில் கொள்ளை: இருவர் கைது

பொங்கலூர் அருகே அடுத்தடுத்துள்ள அம்மன் கோயில்களில் பூட்டுகளை உடைத்து தங்க நகைகள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்த இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் எஸ்.வேலாயுதம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி காலை ஊழியர்கள் பார்த்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்க மாங்கல்யம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போயிருந்தது, தெரியவந்தது. அவிநாசிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதேபோல அருகேயுள்ள காட்டூர் மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றே கால் பவுன் தங்க மாங்கல்யம், வெள்ளநத்தம் பட்டத்தரசி அம்மன் கோயிலில்,அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் உண்டியல் பணம், வெள்ளநத்தம் கரியகாளியம்மன் கோயிலில், அரை பவுன் தங்கம் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தன.

இதுதொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோயில்களில் கொள்ளையடித்தது தொடர்பாகதிண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த விருமாண்டி (55), மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (40) ஆகியோரை காமநாயக்கன்பாளையம் போலீஸார் நேற்று கைது செய்தனர்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்