பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

By செய்திப்பிரிவு

வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை பாமகவினர் முற்றுகையிட்டனர். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமகவின் மாநில செயற்குழு உறுப்பினர் வடிவேல் தலைமை வகித்தார்.

கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், இடஒதுக்கீடு கோரியும் வாத்திய ஒலியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கக் கோரியும் பேரூராட்சி அலுவலகத்தில் பாமகவினர் மனு அளித்தனர்.

உடுமலை

இதே கோரிக்கை களை வலியுறுத்தி உடுமலை அடுத்த மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாமக சார்பில் மடத்துக்குளத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமைவகித்தார். கோரிக்கை வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்