பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

By செய்திப்பிரிவு

வெள்ளகோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை கீழே தள்ளிவிட்டு, பெண் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் சன்மதி நகரைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன், பரமேஸ்வரி (57).

இருவரும், கடந்த வாரம் திருப்பூர் மாவட்டம் மூலனூர் சோமன்கோட்டை பகுதியிலுள்ள பரமேஸ்வரியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை அங்கிருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.

மூலனூர் - வெள்ளகோவில் சாலை கரட்டுப்பாளையம் அருகே, பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர், பரமேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

நகையை பிடித்து இழுத்ததில், வாகனத்துடன் தம்பதி சாலையில் விழுந்தனர். லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுதொடர்பாக வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்