ஆடுகளை திருடிய 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி ஊர்வழித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பி.சுரேஷ்குமார் (30). இவரது தோட்டத்தில், கடந்த 13-ம் தேதி 4ஆடுகள் திருடுபோயின.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 2தினங்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டம் நம்பியூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் (30), திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் அருகே ஆணைக்கால்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.ஆறுமுகம் (50) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சேவூர் தத்தனூர் அருகே புதுசந்தையை சேர்ந்த எம்.பழனிசாமி (55) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்