குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

திருப்பூர் சாமுண்டிபுரம் டி.என்.சேஷன் வீதியை சேர்ந்தவர் பி.நந்தகுமார் (22). கடந்த நவம்பர் 11-ம் தேதி இரவு காவிலிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற வழக்கில் அனுப்பர்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது ஏற்கெனவே அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்க முயற்சி செய்தது தொடர்பாக ஒரு வழக்கும் உள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நந்தகுமாரை கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல்ஆணையர் க.கார்த்தி கேயன் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்