ஓய்வூதியர்கள்கூட்டமைப்புஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய, மாநில அரசுகள்ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படியை முடக்க கூடாது எனவலியுறுத்தி ஓய்வூதியர்கள் சார்பில் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆர்எம்எஸ் அலுவலகம்முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில உதவி தலைவர் பா.சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார்.

அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ்ஓய்வூதியர் சங்க மாவட்டசெயலாளர் கருப்புசாமி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் க.சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறைகளில் பணியாற்றிய ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்