திண்டுக்கல் மாவட்டத்தில் 42 மினி கிளினிக் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 42 இடங்களில் அம்மா கிளினிக் திறக்கப்பட்டது.

தமிழக அரசின் அம்மா கிளினிக் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 42 அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் நாகல் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அம்மா கிளினிக்கை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ஏழை, எளிய மக்களின் உடல்நலத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் தமிழக அரசு, ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளைக் கண்டறிந்து அம்மா கிளினிக் திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றார்.

பின்னர், செட்டிநாயக்கன்பட்டி, புளியமரத்துக்கோட்டையில் அம்மா கிளினிக்குகளை அவர் தொடங்கிவைத்தார்.

தேன்மொழி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மருத ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்