டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 3-வது நாளாக போராட்டம்: 200 பேர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்தியவிவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சி,செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 3-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுசார்பில் ஜெ.அருள், பி.துளசிநாராயணன், என்.எஸ்.பிரதாப் சந்திரன், சகாயமேரி, கோபால் உள்ளிட்டோர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் 158 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE