மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பிளஸ் 2 துணைத் தேர்வர்களுக்கு மதிப்பெண் பட்டியல் பெற வசதி

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், "பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான துணைப் பொதுத் தேர்வு, கடந்த செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுதி மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 15-ம் தேதி மதியம் 2 மணிக்கு தங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இல்லாத தேர்வு எண்களுக்கான விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்