திண்டுக்கல்லில் விவசாயிகள் சங்க கூட்டம்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.லட்சுமண பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைத் தோட்ட விவசாயிகள் சங்கம், நீரினை பயன்படுத்துவோர் சங்கம், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வரும் 14-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்