4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் ஜெயலலிதா சிலை, படத்துக்கு மாலை அணிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி, அவரது சிலை, உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் நேற்று அஞ்சலி செலுத் தினர்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி கல்கண்டார் கோட்டை, காட்டூர், திருவெறும்பூர், துவாக்குடி, லால்குடி, மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் படத்துக்கு அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளையும் வழங் கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், திருவெறும் பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஆர்.ராஜ் மோகன், மாவட்டப் பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் நிதி சதீஷ்குமார், அண்ணா தொழிற்சங்க செயலா ளர் கார்த்திக், வர்த்தக அணி செயலாளர் சூரியூர் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.சுரேஷ்குமார், கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலை களுக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி கு.பரசுராமன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கும்பகோணம் மகாமக குளம் அருகில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு நகரச் செயலாளர் ராம.ராமநாதன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு ஜெயலலிதா பேரவையினர் அதன் செயலாளர் அயூப்கான் தலைமையில் மாலை அணிவித்தனர்.

இதேபோல, பேராவூரணியில் எம்எல்ஏ ம.கோவிந்தராசு தலைமை யில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூரில்...

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு அதிமுகவினர் மாவட்டச் செயலாளரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந் திரன் தலைமையில் மாலை அணிவித்தும், அதன் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவியும் அஞ்சலி செலுத் தினர். பெரம்பலூர் எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்சியின் நகரச் செயலாளர் க.பாஸ்கர் தலைமை வகித்தார். இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில்...

ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஜெயங் கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் அதிமுகவினர் அரியலூர் ஒற்று மைத் திடலில் இருந்து பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் சென்றனர்.

பின்னர், அரசு தலைமைக் கொறடா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கரூர் மாவட்டத்தில்...

ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல கரூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அலங்கரிக் கப்பட்ட ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாகை மாவட்டத்தில்...

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நாகை அதிமுக அலுவலகத்தில் வைக் கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதிமுக நகரச் செயலாளர் தங்க.கதிரவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காரைக்காலில்...

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான எம்.வி.ஓமலிங்கம் தலைமையில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்எல்ஏ கே.ஏ.யு.அசனா உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்