சுவர் இடிந்து விழுந்து முதியவர், மூதாட்டி உயிரிழப்பு

திருச்சி தென்னூர் புதுமாரி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி(75). மண் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரு தினங் களுக்கு முன் திருச்சியில் பெய்த கனமழையின்போது இவரது வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய மணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து தில்லைநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங் கைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(65). இவர், நேற்று காலை வீட்டில் இருந்தபோது, தொடர்மழையின் காரணமாக ஈரமடைந்த வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாட்டில் சிக்கிய முத்துலட்சுமியை வீட்டில் உள்ள வர்கள் மீட்டு, தஞ்சை மருத்து வக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து செந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்