மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி புதுடெல்லியை நோக்கி ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடங்கிய பேரணியில் போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதைக் கண்டித்தும், பாஜக அரசை கண்டித்தும் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் குமரன் நினைவகம்முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், பாஜக அரசின் விவசாயிகள் மீதான தாக்குதல் நடவடிக்கையை கண்டித்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்