புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர் எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் ஆய்வாளர் கணேசன்தலைமையிலான போலீஸார் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த கார் மற்றும் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, வாகனங்களுடன், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த கே.மணிகண்டன் (26), எம்.பாலாசிங் (21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள், வடமாநிலங்களில் இருந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து, திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில் மளிகைக் கடைகளுக்கு விநியோகம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள ஸ்டாலின் ராஜா என்பவரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்