சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் போலீஸார், சைல்டுலைன் அமைப்பினர் நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கோயிலில் நேற்று அதிகாலை திருமணம் நடைபெற இருப்பதை அறிந்த சைல்டுலைன் அமைப்பினர் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய போலீஸார் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர், அவர்களிடம் எழுதி பெற்று அனுப்பி வைத்தனர்.

மற்றொரு திருமணம்

இதேபோல திருப்பூர் முதலிபாளையத்தை சேர்ந்த 17 வயதுசிறுமிக்கும், தாராபுரம் சாலையை சேர்ந்த 36 வயது நபருக்கும் நாச்சிபாளையம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெறுவதாக தகவல் கிடைத்து, சைல்டுலைன் அமைப்பினர் நேற்று காலை அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் திருமணம் முடிந்துவிட்ட காரணத்தால், திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையத்தில் சைல்டுலைன் அமைப்பினர் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்