பரமசிவம்பாளையத்தில் பாலம் அமைக்க கோரிக்கை

பொங்குபாளையம் கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.அப்புசாமி, திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளரிடம் நேற்று அளித்த மனுவில், "பொங்குபாளையம் ஊராட்சி சிவகிரி தண்ணீர் பந்தலில் இருந்து கோவை - சேலம் புறவழிச்சாலைக்கு செல்லும் சாலையில், பரமசிவம்பாளையம் மடையக்காடு கிழக்குத் தோட்டம் சந்திப்புமிகவும் தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால், மழைக் காலத்தில் சாலையில் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்குகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க உயர்மட்ட பாலம் மற்றும் சாலை தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்