ஆன் லைன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

செங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிலர் பேராசையால் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதில் ஈடுபடுவோர் பணத்தை இழப்பதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

பெற்றோர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதுடன், தங்கள் குழந்தைகள் இந்த சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்கவும் வேண்டும். இவற்றை கட்டுப்படுத்த காவல் துறை பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பொதுமக்கள், காவல் துறையுடன் ஒத்துழைத்து தங்கள் குடும்ப நலனை காக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்