திருப்பூரில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 9 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து, ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட வருவாய் துறையில் வட்டாட்சியர் நிலையில் உள்ளவர்கள், நிர்வாக நலன் கருதி பணி மாறுதல் மற்றும் நியமனங்கள் செய்து ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருப்பூர் கோட்டாட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளராக இருந்த ஜெகதீஷ்குமார், திருப்பூர் பறக்கும் படை துணை வட்டாட்சியராகவும், காங்கயம் முன்னாள் கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த ஈஸ்வரன்,காங்கயம் கலால் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் சார் ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளராக இருந்த சிவகாமி, காங்கயம் வட்டாட்சியராகவும், திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் முன்னாள்தனி வட்டாட்சியராக இருந்த தமிழ்ச்செல்வன், தாராபுரம்வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் அரசு கேபிள் டி.வி. முன்னாள் தனி வட்டாட்சியராக இருந்த ஜெகநாதன், அவிநாசி வட்டாட்சியராகவும், திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்புத் திட்ட முன்னாள் துணை வட்டாட்சியராக இருந்த ராமலிங்கம், உடுமலைவட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த முரளி, ஊத்துக்குளி வட்டாட்சியராகவும், மடத்துக்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக இருந்ததயானந்தன், உடுமலை சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், உடுமலை சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியராக இருந்த கணேசன், மடத்துக்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய் ஆய்வாளர்கள்

இதேபோல, திருப்பூர் ஆட்சியர்அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த பத்மபிரியா, நல்லூர் உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராகவும், நல்லூர் உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராக இருந்த மைவிழி, ஆட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த சத்தியசெல்வி, கன்னிவாடி உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராகவும், கன்னிவாடி உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராக இருந்த ஜாபர்அலி திருப்பூர் தெற்கு உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தெற்கு உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராக இருந்த அன்பரசு, திருப்பூர் கலால் உதவி ஆணையர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, உடுமலை குறிச்சிக்கோட்டை உள்வட்ட நில வருவாய்ஆய்வாளராக இருந்த கணேஸ்வரி, குண்டடம் உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராகவும், குண்டடம் உள்வட்ட வருவாய் ஆய்வாளராக இருந்த ராஜேஸ்வரி, குறிச்சிக்கோட்டை உள்வட்ட நில வருவாய் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாராபுரம் வட்டாட்சியர்அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த ரங்கநாயகி,உடுமலை வட்டாட்சியர் அலுவலகமுதுநிலை வருவாய் ஆய்வாளராக வும், குண்டடம் முன்னாள் உள்வட்டவருவாய் ஆய்வாளராக இருந்தஆனந்தராஜ், திருப்பூர் ஆட்சியர்அலுவலக ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நல முதுநிலைவருவாய் ஆய்வாளராகவும் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உத்தரவை, வருவாய்அலுவலர் கு.சரவணமூர்த்தி பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்