தொழிலாளி கொலை வழக்கு நண்பரை காவலில் எடுக்க போலீஸார் முடிவு

திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரி எதிரில் 9 காம்பவுண்ட் எனப்படும் குடியிருப்பில், ஒரு வீட்டில் தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி (27), மதுரையை சேர்ந்த சங்கர் ஆகிய இரு இளைஞர்கள் தங்கி, பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர்.

கடந்த 2-ம் தேதி அவர்கள் வசித்த வீடு பூட்டியிருந்த நிலையில், உள்ளிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார், வீட்டைத் திறந்து, சிமென்ட் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து அடையாளம் தெரியாத, அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் இசக்கி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘இசக்கியுடன் தங்கியிருந்த சங்கர் குற்ற வழக்கு ஒன்றில் ஈரோடு மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முழு விவரத்தை அறிய சங்கரை, காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். சங்கருக்கு கொலை உட்பட மேலும் சில குற்ற வழக்குகளில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த கொலையையும் அவர் செய்திருக்க வாய்ப்புள்ளது என சந்தேகிக்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்