திண்டுக்கல் கடை வீதிகளில் வாகனத்துக்கு தடை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சிரமம் இன்றி கடைவீதி பகுதிகளுக்குச் சென்றுவர ஏதுவாக, நகரின் மையத்தில் உள்ள கடைவீதி களில் அனைத்து வகை வாகனங்களும் சென்றுவரத் தடை விதிக்கப்படுகிறது.

திண்டுக்கல் பெரியார் சிலை முதல் எம்பி கோயில் வரையும், மணிக்கூண்டு முதல் தங்கம் விடுதி சந்திப்பு வரையும், மணிக்கூண்டு முதல் ஈஸ்வரி விடுதி சந்திப்பு வரையும் வெள்ளிக்கிழமை (நவ.13) காலை முதல் வாக னங்கள் அனுமதிக்கப்படாது கடைவீதிக்குச் செல்வோர், வாகனங்களை டட்லி பள்ளி மைதானத்திலும், பொதுப் பணித்துறை அலுவலகம் முதல் மாநகராட்சி அலுவலகச் சாலையிலும் நிறுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்